Thursday, October 30, 2014

அண்ணா பல்கலைகழகத்தில்  விவசாய கருத்தரங்கு !!!


சென்னை :-

அண்ணா பல்கலைகழகத்தில், “அக்ரிமீடியா“ என்னும் தலைப்பில் ஊடகத்துறை மற்றும் யுவசக்தி அமைப்பினர் இனணந்து விவசாயத்தில் ஊடகத்துறையின் பங்கு பற்றி ஒருநாள் கருத்தரங்கை அக்டோபர் 15 அன்று நடத்தினர். ஊடகவியல்துறையின் தலைவர் டாக்டர் எஸ்.கெளரி வரவேற்பு உரையற்றினார் .Ac Tech தலைவர் டாக்டர் எஸ்.சிவனேசன் தலைமை தாங்கி விவசாயத்தில் எற்பட்ட பின்னடைவைப்பற்றி எடுத்துரைத்தார். முன்னாள் ஊடகவியல்துறை மாணவி திவ்யா ராமலிங்கம் யுவசக்தி அமைப்பின் பணிகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். சிறப்பு விருந்தினராக தி இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் சமஸ் பங்கேற்றார். அவர் ஊடகங்கள் ஏன் விவசாயத்தை புறக்கணிக்கின்றது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார். சுப்பர் மார்கெட்களில் நடக்கும் அவலங்களை அவர் பட்டியளிட்டார். 25 % வரை  சுப்பர் மார்கெட்களில் உள்ள விலை உயர்வை அவர் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் முடிவில் தெரிந்ததாக குறிப்பிட்டார். காவிரி  நதிநீர் பிரச்சனையைப் பற்றி பத்து அரிய தகவல்களை கூறினார்.அவர் மாணவர்கள் விவசாயத்தை மற்றும் தங்களை சுற்றி நடக்கும் அரசியலை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஊடகத்துறை பேராசிரியர் அருள்செல்வன் நன்றி உரையாற்றினார் .

             கருத்தரங்கின் மற்றோரு அமர்வாக மாணவர்கள்  இயற்கை  விவசாயத்தை  பற்றியும் விவசாய முறைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். அதன்பின் முன்னாள் விகடன் மாணவ பத்திரிக்கையாலர் விஷ்ணு விவசாயத்திர்க்கு ஊடகம் ஆற்றிய பணிகலை பற்றி உரையாற்றினார். “ விவசாயத்தில் ஊடகத்தின் பங்கு” என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது .அதில் பத்திரிக்கையாளர்கள் சுரேஷ்குமார்( The New Indian Express ), கார்த்திக்கை செல்வன்(Times of India ), தன விஜயன்(Zee தமிழ் தொலைக்காட்சி),லெட்சுமி சுப்ரமனியம்(The Week), ஜெனார்த்தனப் பெருமாள்( புதிய தலைமுறை),பொன்.செந்தில் குமார் (பசுமை விகடன் ),  சீனு (மக்க்ள் தொலைக்காட்சி)  ஆகியோர் பங்கேற்றன்ர். அவர்கள் ஊடகங்கள் விவசாயத்திற்க்கு எந்தெந்த வழிகளில் முக்கியத்துவம் தரலாம் என ஆலோசனை கூறினர். அதை தொடர்ந்து, யுவசக்தி அமைப்பின் செயலாளர் விஜயாந்தி இந்திய விவசாயைத்தை பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.  நமது அரசின் திட்டங்கள் விவசாயத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைப் பற்றி கூறினார். அண்ணா பல்கலைக்கழக தேசிய சமூக  நலப்பணி தலைவர் பால்ராஜ் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

                                 -டி.எஸ்.அஸ்வின், அ.முகமது யுசுப்

No comments:

Post a Comment